Categories
உலக செய்திகள்

என்ன….? உக்ரைனின் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை…. பிரபல நாடு நிறுத்தியது….!!!!

உக்ரைன் நாடு உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளராக இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் அந்நாட்டின் மீதான ரஷ்ய படையெடுப்பால் தானிய ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஐ.நா. மற்றும் துருக்கியின் ஏற்பாட்டில் உக்ரைன்-ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையிலான கடந்த ஜூலை மாதம் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் தானிய போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் சரக்குக் கப்பல்கள் மீது துறைமுகத்திலோ, கடல்வழியிலோ தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ரஷ்யாவும், உக்ரைனும் உறுதியளித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து இந்த  ஒப்பந்தத்தின் அடிப்படையில் உக்ரைன்-ரஷ்யா இடையிலான போருக்கு நடுவே  அந்நாட்டின் தானியங்கள் கருங்கடல் வழியாக சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரீமியாவில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் கருங்கடலில் சென்று கொண்டிருந்த ரஷ்ய தானிய கப்பல் சேதமடைந்ததாகவும் அந்நாட்டின் பரபரப்பு குற்றம் சாட்டியது.

ஆனால் உக்ரைன் அதை மறுத்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய தானிய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக உக்ரைனுடனான தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் இந்த அறிவிப்பால் தானிய ஏற்றுமதி தடைப்பட்டு மீண்டும் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

 

Categories

Tech |