வீட்டுக்குள் வியாபாரி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி பேருந்து நிலையத்தில் உதயகுமார் என்பவர் பேனா விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த உதயகுமார் பாரதிபுரத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் உதயகுமார் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டுக்குள் உடல் அழுகிய நிலையில் உதயகுமார் இறந்து கிடப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் உதயகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உதயகுமார் இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.