Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? டிரைவருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

லாரி டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் செல்ல வேலு என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கிழக்கு, மேற்கரை கால்வாய் கரை பகுதியில் செல்ல வேலு வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்ல வேலுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து கொலை நடந்த இடத்தை பார்வையிட்ட காவல்துறையினர் இது தொடர்பான விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்ல வேலு கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |