Categories
மாநில செய்திகள்

இனி சிலை கடத்தல் குறித்து மக்கள் ரகசிய தகவலை தெரிவிக்க…. வந்தது “பிளாக் செயின்” தொழில்நுட்பம்…..!!!!

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் ரகசிய தகவல்கள், புகார்கள் தெரிவிக்க பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி http://complaints.tnidols.com என்ற பிரத்யேக இணையதளத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்.

தமிழகத்தில் முதல் முறையாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பிளாக் செயின் தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிலுள்ள தரவுகளை ரகசியமாக சேமிக்கவும், கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் சரியான தகவலை அனுப்பும் பொதுமக்களுக்கு டிஜிட்டல் டோக்கன்களில் பரிசு வழங்கப்படும் என்றும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |