Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இங்கு மட்டும் அரசு பேருந்துகள் வரல…. ரொம்ப கஷ்டமா இருக்கு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பெருகவாழ்ந்தான் கிராமத்திற்கு அரசு பேருந்துகளை இயக்குவதற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள பெருகவாழ்ந்தான் கிராமத்திற்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து சங்கேந்தி, தோலி, பின்னத்தூர், தேவதானம், செந்தாமரைக்கண் வழியாக அரசு பேருந்துகள் சென்று வந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் போது இந்தப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனையடுத்து கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் கடந்த 10 நாட்களாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் திருத்துறைப்பூண்டியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் அரசு பேருந்துகள் மட்டும் இயங்காததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியபோது மண்ணுக்குமுண்டான், பெருவிடை மருதூர், மானங்காத்தான், கோட்டகம், நாணலூர், செந்தாமரைக்கண், தேவதானம், ஒட்டங்காடு போன்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழ்ந்து வரும் பொதுமக்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், முதியோர்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக திருத்துறைப்பூண்டி போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் தெரிவித்தும் இன்னும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. எனவே திருத்துறைப்பூண்டியில் இருந்து இந்த கிராமத்திற்கு காலை, மதியம், மாலை ஆகிய 3 நேரத்திலும் மீண்டும் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரும், திருத்துறைப்பூண்டியில் இருந்து பெருகவாழ்ந்தானுக்கு அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Categories

Tech |