Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இங்கு கடை வைக்க கூடாது…. போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படும்…. அதிகாரிகளின் எச்சரிக்கை….!!

மண்டித்தெரு, லாங்கு பஜாரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி கடை உரிமையாளருக்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள மண்டித்தெரு, லாங்கு பஜாரில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை நடத்தி வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சங்கரனுக்கு புகார்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து கமிஷனர் உத்தரவின்படி, 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையில், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் அந்தப் பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பழக்கடைகளை அகற்றி அரிசி மூட்டைகள், மளிகை பொருட்களை கடையின் உள்ளே வைக்கும்படி உரிமையாளரிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர். எனவே பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக நடைபாதையில் கடையின் பெயர் பலகை போன்ற எந்த பொருட்களை வைக்கக் கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |