Categories
உலக செய்திகள்

பதவி விலகிய இங்கிலாந்து மந்திரி…. பின்னடைவை சந்திக்கும் ரிஷி சுனக்…!!!

இங்கிலாந்தில் மந்திரி ஒருவர் பதவி விலகியதால் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக்  தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள்வதற்கு தகுந்த நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனிடையே இணை மந்திரியாக இருந்த காவின் வில்லியம்சன், ஒரு எம்.பிக்கு துன்புறுத்தத்தக்க விதத்தில் குறுஞ்செய்திகள் அனுப்பினார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இவர், இதற்கு முன்பே இரண்டு தடவை சில பிரச்சினைகள் ஏற்பட்டு மந்திரி பதவியில் இருந்து விலகினார்.

அவரை மந்திரியாக நியமித்த போதே சர்ச்சைகள் ஏற்பட்டது. இந்நிலையில் அவரே, பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து விட்டார். இது பற்றி அவர் தெரிவித்ததாவது, நேர்மை மற்றும் வெளிப்படையான முறையில் விசாரணை நடப்பதற்கு தகுந்த ஒத்துழைப்பை தருவேன். இந்த அரசாங்கத்தின் மீது என்னால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதை தடுப்பதற்காக பதவி விலகி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |