திருப்பத்தூரில் 45 வயது மேல் இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து 18 வயது முதல் 44 வயது இருப்பவர்கள் அனைவரும் சிறப்பு முகாமிற்கு சென்று ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் 45 வயதிற்கு மேல் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு சென்றால் அவர்களுக்கு தடுப்பூசி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே கடந்த 4 நாட்களாக 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகிகள் கூறியபோது தற்போது 18 வயது முதல் 44 வயது வரை இருப்பவர்களுக்கு பதிவு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் 45 வயது மேல் இருப்பவர்களுக்கு பதிவு செய்ய முடியாததால் தடுப்பூசி செலுத்த முடியவில்லை என மருத்துவ நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர். எனவே 45 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.