செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டியில் விக்டர் சந்திரபால் மகன் ஐசக் வசித்து வந்தார். இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து விவாகரத்து ஆன நிலையில் வீட்டின் மேல் மாடியில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் ஐசக் வீட்டிலிருந்த கேபிள் வயர் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஐசக்கின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.