வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணலூரில் விவசாயி மாது வசித்து வருகின்றார். இவருக்கு குமார் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் மகன் குமாரை ஏன் ஆடு மேய்க்கவில்லை என்று தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த குமார் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் குமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.