Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 75,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி – அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக இந்தப் புதிய தொழில்  கொள்கை மற்றும் புதிய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என ஆளுநர் உரையில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்விரண்டு தொழில் கொள்கைகளையும் நாளை காலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற இருக்கும் விழாவில் முதல்வர் வெளியிட இருக்கிறார்.

மேலும், தமிழகத்தில் புதிய தொழில் துவங்க 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின்றன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 75,000 பேருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர ஏற்கெனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில், 20 தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டை நாளை முதலமைச்சர் தொடக்கி வைக்கிறார்.

இந்த ஒப்பந்தங்கள் மூலமாக சுமார் 2.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் 4 சிப்காட் மற்றும் 6 டிட்கோ தொழிற் பேட்டைக்கு முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்ட இருக்கிறார். கொரோனா பரவலை தொடர்ந்து தமிழகத்தில் வேலையின்மைப் பிரச்சினை நிலவி வருகின்றது. இந்த சூழலில் இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Categories

Tech |