Categories
உலக செய்திகள்

அடுத்த வருடம் வரை அவசர நிலை பிரகடனம்… அமெரிக்க மாகாணம் அறிவிப்பு…!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் கவர்னர் அவசர நிலை பிரகடனம் அறிவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்திருக்கிறது. எனவே. அம்மாகாணத்தின் கவர்னரான Kathy Hochul, அவசர நிலை பிரகடனம் அறிவித்திருக்கிறார். நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கடந்த 2020 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து மாகாணத்தில் இல்லாத அளவில், தற்போது கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது. மேலும், தற்போது கொரோனா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் விகிதம் கடந்த மாதத்தில் தினசரி 300 ஆக உயர்ந்திருக்கிறது.

எனவே, அடுத்த வருடம் ஜனவரி 15-ஆம் தேதி வரை மாகாணம் முழுக்க அவசர நிலையை அறிவிப்பதாக கவர்னர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். இதனால், மாகாணத்தின் மருத்துவ திறன் மேம்படும் மற்றும் கொரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்தப்படுவதும் அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |