பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் தற்போது எமர்ஜென்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் எமர்ஜென்சி காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மையமாக வைத்து உருவாகுகிறது. இந்த திரைப்படத்தை நடிகை கங்கனா இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படப்பிடிப்புக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கங்கனா ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் அசாம் மாநிலத்தில் தான் படப்பிடிப்புக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கங்கனா ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த ஒரு வார காலமாக அசாம் மாநிலத்தில் ஷூட்டிங் நடத்துவதற்கான சரியான இடத்தை தேடி வருகிறோம். நான் பலமுறை அசாம் வந்திருக்கிறேன். இங்குள்ள காசிரங்கா மற்றும் கர்ஃபி அல்லாங் போன்ற பகுதிகளில் ஷூட்டிங் நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்து வருகிறோம். இங்கு அழகான பல இடங்கள் இருப்பதால் விரைவில் என்னுடைய பட குழுவுடன் நான் வருவேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த பயணத்தின் போது நடிகை கங்கனா முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மரியாதை நிமித்தமாக சந்தித்து அவருக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.