கடல் சீற்றத்தால் கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளங்களும் வைத்து மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மீன்கள் இனப்பெருக்கம் பருவகாலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த மே மாதம் 31-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக விசைப்படகுகள் வைத்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆனால் வள்ளங்கள், கட்டுமரங்கள் வைத்து மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அங்கு கடல் சீற்றத்துடன் பலத்த சூறை காற்று வீசியதால் கட்டுமரங்கள் தொடர்ந்து செலுத்த முடியாமல் பாதியிலேயே மீனவர்கள் கரை திரும்பினர். இதனால் மீன் வாங்க வந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.