தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் மிகவும் பேசப்பட்ட படங்களாகவே அமைந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைப்புலி தானு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாகவே அமைந்தது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் அளித்த பேட்டியில், எழுத்தாளர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நிறைய எழுத்தாளர்களிடம் பணியாற்ற வேண்டும். அதுதான் ஆரோக்கியமானது. எழுத்தாளர்களிடம் அகங்காரத்தை குறைக்க வேண்டும். அவர் எதை சொல்ல போகிறார் என்கின்ற ஈகோ மனநிலையில் இருந்து வெளியே வந்தால் தான் சில ஞாபகங்கள் புரியவரும் என்று தெரிவித்துள்ளார்.