களப்பால் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள களப்பால் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகின்றது. எனவே தற்போதைய கட்டிடத்தில் போதிய அளவு வசதிகள் இல்லாததால் மாநில சமச்சீர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 80 லட்சம் ரூபாயில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்தது. இந்தப் பணிகள் நிறைவு பெற்று 6 மாதம் முடிந்தும் கட்டிடம் திறக்கப்படாமல் இருக்கின்றது.
இதனை திறந்தால் திருக்களர், கரம்பக்குடி, பன்னியூர், அக்கரை கோட்டகம், வாட்டர், வெங்கத்தான்குடி, களப்பான், குலமாணிக்கம், அப்பியன் திருவாசல், சீலத்தநல்லூர், மீனம்பநல்லூர், நல்லநாயகிபுரம், சோலைக்குளம் உட்பட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கட்டிடத்தை சீக்கிரம் திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்றக்கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.