Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதுக்கு அப்புறம் தான் தெரியும்… உடலில் இருந்த அடையாளங்கள்… வனத்துறையினரின் தகவல்…!!

வனப்பகுதியில் 1 1/2 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மான், புலி, யானை போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆனைகட்டி வனப் பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானையை பார்த்து உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் காட்டு யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்து கிடந்தது 1 1/2 வயதுடைய பெண் காட்டு யானை என தெரிவித்துள்ளனர். மேலும் அந்த காட்டு யானையின் அடி வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு காட்டு யானை இறந்ததற்கான உரிய காரணம் தெரியவரும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |