Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு….. அருண் மொழி பேட்டையில் 4 மணி நேரத்திற்கு பிறகு வாக்கு பதிவு…!!

பாபநாசம் அருண் மொழி பேட்டையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக 4 மணி நேரத்திற்கு பிறகு வாக்கு பதிவு செலுத்தப்பட்டு வருகிறது   

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். சினிமா பிரபலங்கள்  பலரும், அரசியல் தலைவர்களும் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

Related image

இதனிடையே தமிழகத்தில் சில இடங்களில் வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக வாக்கு செலுத்துவதில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருண்மொழி பேட்டையில்  4 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து  தமிழகம் முழுவதும் 305 மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் மாற்றப்பட்டது. இதையடுத்து 4 மணி நேரத்திற்கு பிறகு  பாபநாசம் அருண் மொழி பேட்டையில் வாக்கு பதிவு நடை பெற்று வருகிறது.

Categories

Tech |