Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க” எலக்ட்ரிசியன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சித்தனகால் கிராமத்தில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரிசியனான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் மணிகண்டன் தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர் குடிப்பழக்கத்தை விட்டால் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் மணிகண்டன் குடிபோதையில் பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் மணிகண்டனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் விஷத்தை குடித்துவிட்டு மயங்கிக் கிடந்துள்ளார். இதனை பார்த்த பெற்றோர் மணிகண்டனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |