எலக்ட்ரீசியன் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பைங்குளம் பகுதியில் எலெக்ட்ரீசியனான விஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மலர்விழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் விஜி கிணத்தடி தாவு ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் விஜி வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அனைத்து இடங்களிலும் அவரை தேடி பார்த்துள்ளனர்.
இந்நிலையில் தாமிரபரணி ஆற்றின் தடுப்பணை பகுதியில் விஜயின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விஜியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.