Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாட்டர் சர்விஸ் செய்த போது… திடிரென தாக்கிய மின்சாரம்… பின் நேர்ந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருக்கும்போது திடீரென தாக்கிய மின்சாரத்தால் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள வடக்கு வாசல் கங்கா நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் மெக்கானிக் ஷாப் ஒன்றில் இருசக்கர வாகனத்திற்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருக்கும் போது தரையில் கிடந்துள்ள சேதமடைந்த மின் ஒயரில் மிதித்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி உள்ளது.

இதனால் தூக்கி வீசப்பட்ட லட்சுமணனை அக்கம்பக்கத்தினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு லட்சுமணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு வாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |