மின்சாரம் தாக்கி எலக்ட்ரிக் வேலை செய்யும் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைபூண்டி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ரிஷி பாலன் என்பவர் எலெக்ட்ரிசினாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரிஷி பாலன் நெடுங்குளத்தில் இருக்கும் ஒரு வீட்டில் கதவு போடும் பணிக்காக துளை போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரிஷி பாலனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.