திமுக, அதிமுக வேட்பாளார்களுக்கிடையே இருக்கக்கூடிய வாக்கு வித்தியாசமும், நோட்டாவிற்கான வாக்கு எண்ணிக்கையும் ஒரே அளவில் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சிறிய அளவிலான வாக்கு வித்தியாசம் மட்டுமே இருப்பதால், யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு சூழல் அரசியல் களத்திலும், தமிழக மக்களிடமும் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தொடர்ந்து கணிசமான வாக்குகளை பெற்று வரும் நாம் தமிழர் கட்சி இத்தேர்தலிலும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.
இதையடுத்து நோட்டாவுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்து தேர்தல் குறித்த தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நோட்டாவிற்கு சுமார் 8,406 வாக்குகள் பதிவாகியிருக்கும் நிலையில், திமுக அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே இருக்கக்கூடிய வாக்கு வித்தியாசம் 8,460 ஆக இருப்பது மக்களிடையே தேர்தல் குறித்த அதிருப்தியை தெளிவாக காட்டுகிறது.