மகராஷ்டிராவில் மே 21ம் தேதி சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் + காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மாநில முதலமைச்சராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள உத்தவ் தாக்கரே ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற வேண்டும், இல்லை என்றால் அவர் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வாக வேண்டும். கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தினால் சட்டமேலவை உறுப்பினராகவும் இல்லாமல் இருந்ததால் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவிக்கு சிக்கல் எழுந்தது.
கொரோனா தடுப்பு பணிகள் நாடு முழுதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் சட்டமேலவை தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு இங்குள்ள அரசியல் சூழல் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து வருகின்ற மே 21ம் தேதி மகாராஷ்டிராவின் சட்டமேலவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் தக்கவைத்துக்கொள்ள முடியும்.