Categories
அரசியல் தேசிய செய்திகள்

Election Breaking: 155 சீட்டில் முன்னிலை…. மீண்டும் BJP ஆட்சி… குதூகலத்தில் குஜராத் மக்கள் ..!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.

குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – இமாச்சலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகின்றது. பிற்பகலுக்குள் இரு மாநிலங்களிலும் யார் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற போகிறார் என்பது தெரியவரும்.  பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. முலாய் சிங்கம் மறைவால் நடைபெற்ற மொய்பூரி மக்களவைத் தொகுதியில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தற்போதைய முன்னிலை நிலவரப்படி,  பீகாரில் மட்டும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்க,  சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியும்,  ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தல் கட்சியும், உத்தரப்பிரதேசத்தில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்றில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியும்,  மற்றொன்றில் சமாஜ்வாதி கட்சியும் முன்னிலை வைக்கின்றது.

குஜராத் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் வகையில் 155 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் 32, பாஜக 32 என இடங்களில் முன்னிலை பெற்று கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றது. குஜராத்தில் பாஜக அமைவது உறுதியாகியுள்ள நிலையில், தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் குதூகலமாக இருக்கின்றனர்.

Categories

Tech |