Categories
தேசிய செய்திகள்

ELECTION BREAKING: 4 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜக…. இதோ முன்னிலை நிலவரம்….!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது. தற்போது அந்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதையடுத்து தற்போதைய நிலவரப்படி, உத்திரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 203  தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. சமாஜ்வாதி 99 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 6 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 19 தொகுதிகளிலும், மற்றவை 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 22 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 2 தொகுதிகளிலும், மற்றவை 10 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 24 தொகுதிகளிலும் காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், என்பிபி 13 தொகுதிகளிலும், மற்றவை 9 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 75 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது. 22தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

Categories

Tech |