Categories
உலக செய்திகள்

துருப்பிடித்துவிட்டதா ஈபிள் கோபுரம்…? வர்ணம் பூசுவதாக தகவல்…!!!

பாரீசில் இருக்கும் ஈபிள் கோபுரம் துருப்பிடித்திருப்பதாக ஒரு பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் தலைநகரான பாரீசில் அமைந்துள்ள ஈபில் கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது. சுமார் 1603 அடி உயரத்தில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குஸ்டாவ் ஈபிள் என்ற நபர் காட்டினார். முழுவதுமாக இரும்பை வைத்து கட்டப்பட்ட இந்த ஈவில் கோபுரம் உலக நாடுகளில் அதிகம் மக்களால் பார்வையிடப்பட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இந்நிலையில் நிபுணர்களின் ரகசிய அறிக்கைப்படி, ஈபிள் கோபுரம் துருப்பிடித்து உள்ளது என்றும் அதனை பழுது பார்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. பழுது பார்க்காமல் ஈபிள்  கோபுரத்திற்கு வண்ணம் மட்டும் பூசப்படுகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

20 தடவைகள் இந்த கோபுரத்திற்கு வர்ணம் பூசப்பட்டிருக்கிறது என்று நிபுணர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், ஈபிள் கோபுரத்தை பராமரிக்கும் நிறுவனம் இது பற்றி எந்தவித தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |