Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை தினமும் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கும்!! நரம்புகள் வலிமையாகும்!!

நமது முன்னோர்கள் ஒருபோதும் அரிசி உணவை தினசரி பழக்கத்தில் எடுத்துக் கொண்டதில்லை. அரிசி உணவு என்பது விழாக்காலங்களில் சேர்த்துக்கொள்ளும் ஒரு உணவாக மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

தங்கள் தினசரி உடல் ஆரோக்கியத்திற்கு அவர்கள் நம்பியது எல்லாம் பயிறு, தானியம், கம்பு, கேழ்வரகு, போன்ற உணவுகளை தான். அதனால்தான் அவர்கள் நாம் இன்று அஞ்சி நடுங்கும் நோய்களை பற்றி எல்லாம் அறியாமலேயே இயற்கை மரணம் அடையும் வாய்ப்பை பெற்றிருந்தனர்.

வரகு…

வரகு உணவில் சேர்த்துக் கொள்வதால் எப்படி பட்ட  சோர்வையும் நீக்க முடியும். நரம்புகளின் வலிமையை கூட்ட முடியும். இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரகு எனும் சிறுதானியத்தை பயிர் செய்து வந்துள்ளோம்.ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் நமது உணவுப் பழக்கத்தில்  மாற்றம் உண்டாகின. இதன் பிறகுதான் நம் மக்களின் ஆரோக்கியத்திலும் கேடுகள் அதிகரிக்க துவங்கின.

அமினோ அமிலங்கள் அதாவது புரதம் மொத்தம் 12 அமினோ அமிலங்கள் உள்ளன இதில் 11 வரகில் இருக்கிறது அமினோ அமிலங்கள்தான் புரதம் என்று கூறுகிறோம்.பயிறு மற்றும் பருப்பு வகை உணவுகளை சேர்த்து சமைத்தால் தான் முழு புரதச்சத்தும் உடலுக்கு கிடைக்கின்றன. சிறுதானியங்களில்  இருக்கும் காரத்தன்மை எளிதாக செரிமானமாகி ரத்தத்தில் சத்துக்கள் உடனடியாக சேர உதவுகிறது.

இது மூளையின் செல்கள் ஆரோக்கியமாக வேலை செய்ய உதவுகிறது. நுண்ணுயிர் கிருமிகள் நமது உடலில் 2 வகையான கிருமிகளாக உயிர் வாழும்.  ஒன்று உடல் பாகங்களுக்கு உதவி செய்யும் மற்றவை கேடுவிளைவிக்கும். சிறுகுடல் பெருங்குடலில் நன்மை தரும் நுண்ணுயிர்களை அழிக்காமல்  மற்ற நச்சுக்களை  அழித்து நீக்கும் தன்மை கொண்டுள்ளது.

பிற நன்மைகள்…

உடல் சோர்வை நீக்கும், நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்,குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேம்படும், கண்பார்வை அதிகரிக்கும், ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும், கொலஸ்ட்ரால் குறைக்கும், செல்களின் அழிவை குறைக்கும்.

Categories

Tech |