Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்…. 6.8 என்ற அளவில் ரிக்டரில் பதிவு…!!!

மெக்சிகோ நாட்டில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மெக்சிகோ நாட்டின் மேற்கு மைகோகன் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 7.7 என்ற அளவில் பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. எனவே, மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து பதறியடித்துக் கொண்டு வெளியில் ஓடினார்கள்.

பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த சம்பவத்திலிருந்து தற்போது வரை மக்கள் மீளவில்லை. அதற்குள் இன்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. இது 6.8 என்ற அளவில் ரிக்டரில் பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |