ஆப்கானிஸ்தானில் இன்று காலையில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சுமார் 10.17 மணியளவில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் படக்ஷன் மாகாணத்தில் உள்ள ஃபைசாபாத் நகரத்திலிருந்து கிழக்கில் சுமார் 145 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கமானது, 4.3 ஆக ரிக்டர் அளவில் பதிவாகியிருக்கிறது.
மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பதற்றமடைந்து வெளியில் ஓடி வந்துள்ளனர். எனினும், நல்ல வேளையாக இதனால் எந்த சேதங்களும் ஏற்படவில்லை என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.