Categories
உலக செய்திகள்

சக்கி வாய்ந்த நிலநடுக்கம்… எழும்பும் ராட்சச அலைகள்… சுனாமி வருவதற்கு வாய்ப்பு… ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கும் பிஜிக்கும் இடையே கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறும்போது, இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி இருந்ததாகவும், இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி உருவாகும் அச்சம் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் நியூசிலாந்து பிஜி மற்றும் வனுவாட்டுவின் சில கடலோரப் பகுதிகளில் 0.3 மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரை கடலோர பகுதிகளில் கடல் அலையானது எழும்புவதற்கு வாய்ப்புள்ளதாகவும், அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சுனாமி அலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.

இதேபோல் சக்திவாய்ந்த நிலநடுக்கமானது இந்தோனேசியாவிலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது சுமத்ரா தீவின் கடலோரப் பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. மேலும் இந்த பகுதியானது அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பசுபிக் நெருப்பு  வளைவில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |