Categories
தேசிய செய்திகள்

இ-ஷ்ரம் கார்டில் எக்கச்சக்க நன்மைகள்…. யாரெல்லாம் பயன்பெறலாம்?…. இதோ முழு விபரம்….!!!!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது. அதாவது, அமைப்பு சாரா துறைகளை சேர்ந்த தொழிலாளர்களுக்கு சமூகப்பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசானது இ-ஷ்ரம் யோஜனா திட்டத்தைத் தொடங்கியது.

இ-ஷ்ரம் கார்டில் என்னென்ன நன்மைகள்?..

# தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடைய அமைச்சகங்கள் வாயிலாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சமூகபாதுகாப்பு திட்டங்களின் பலன்களை செயல்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.

# இ-லேபர் கார்டு வைத்துள்ள நபர், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் கீழ் 2 லட்சம் விபத்துக் காப்பீட்டுத்தொகையைப் பெறுவதற்கு உரிமையுடையவர் ஆவார். அத்தகைய நிலையில், அவர்கள் பல லட்சம் மதிப்புள்ள காப்பீட்டின் பலனையும் பெறுகின்றனர்.

# இ-லேபர் போர்டல் அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் நபர்களின் மையப்படுத்தப்பட்ட தரவுத் தளத்தை பராமரிக்கும்.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து சமூகப்பாதுகாப்புப் பலன்களும் இந்த இணையதளத்தின் வாயிலாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நேரடியாக வழங்கப்படும்.

அமைப்புசாரா தொழிலாளர்கள் யார்…?

விவசாயத் தொழிலாளர்கள், பால் விவசாயி, காய்கறி-பழங்கள் விற்பனையாளர், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், செங்கல்சூளை தொழிலாளி, மீனவர்கள், மரம் அறுக்கும் தொழிலாளர்கள், லேபிளிங் மற்றும் பேக்கிங்தச்சர், பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலாளி, உப்பு தொழிலாளி, கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள், வீட்டு வேலையாட்கள், முடிதிருத்துபவர், செய்தித்தாள் விற்பனையாளர்கள், ரிக்ஷா ஓட்டுனர், ஆட்டோ டிரைவர், பட்டு உற்பத்தி தொழிலாளி, வீட்டு வேலைக்காரர்கள், MGNREGA தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர்.

Categories

Tech |