சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 2 வாலிபர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகம்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோனார் கோட்டை புதூரில் வசித்து வரும் சுடலை என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் செட்டிகுறிச்சியில் இருந்து வெள்ளாளங்கொட்டை செல்லும் வழியில் உள்ள பெருமாள் கோவிலில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்த இருவரையும் மடக்கிப் பிடித்து அவர்களிடம் இருந்த 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.