ஓடும் ரயிலில் குடிபோதையில் ரகளை செய்த பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகரிலிருந்து மதுரைக்கு நேற்று இரவு சுமார் 9.40 மணியளவில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட சென்றுள்ளது. இந்த ரயில் 11.30 மணி அளவில் விழுப்புரம் அருகே வந்து கொண்டிருந்தபோது அதில் பயணித்த பயணி ஒருவர் குடிபோதையில் இருந்துள்ளார். அவர் அந்த பெட்டியில் பயணம் செய்த பெண் பயணிகளிடம் அத்துமீறி நடந்துள்ளார். மேலும் பாலியல் தொந்தரவுகளையும் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த சகப்பயணிகள் போதையில் ரகளை செய்தவரை பற்றி பெண் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்துள்ளனர். அவரும் அந்த போதை ஆசாமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவர் இதனை கண்டு கொள்ளாமல் அடுத்தடுத்த ரயில் பெட்டிகளுக்கு சென்று மற்ற பெண் பயணிகளிடமும் ரகலையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் குடிபோதையில் இருந்தவரை தட்டி கேட்டுள்ளார்.
ஆனால் அவர் ரயில்வே ஊழியர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற பயணிகள் அவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இதனை அடுத்து நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு சென்றடைந்துள்ளது. அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீசாரிடம் குடிபோதையில் இருந்தவரை பயணிகள் ஒப்படைத்துள்ளனர். இதனைதொடர்ந்து அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.