Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“மனநலம் பாதிப்பு” விவசாயி செய்த செயல்… போலீஸ் விசாரணை….!!

மனநிலை பாதிக்கப்பட்ட விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் பகுதியில் கதிரவன் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மனநல பாதிப்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கதிரவன் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட அவரது உறவினர்கள் கதிரவனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப்பின் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மத்தூர் காவல்துறையினர் விவசாயியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |