Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதை நிறுத்தவே மாட்டேங்குறாங்க… தினமும் தொடரும் குற்றங்கள்… ஒருவரை கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது மணிக்கட்டி ஆலமரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து அந்த 2 இளைஞர்களும் இருசக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றுள்ளனர்.

அதில் ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அப்பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரன்(23) என்பதும், கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து தப்பியோடிய விக்னேஷ்(26) என்பரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |