Categories
அரசியல் மாநில செய்திகள்

என் கிட்ட கேட்காதீங்க…. H.ராஜா_ட போய் கேளுங்க – பிரேமலதா விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த் நன்றாக கம்பீரமாக இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

இன்று தேமுதிக கட்சியின் ஆலோசனை கூட்டம் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா , சுதீஷ் , பார்த்தசாரதி உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில் , வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் எப்படி சந்திக்கணும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் திருவள்ளுவரை ஹிந்துக்களின் அடையாளமாக பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் , H. ராஜா கருத்துக்கு நான் பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல. நீங்க அவர் கிட்ட தான் கேக்கணும் என்று தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் திருவள்ளுவர் புனிதமானவர் , அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்று தெரிவித்தார்.

Related image

இடைத்தேர்தலில் பாமக – தேமுதிக சண்டை போட்டது என்பது ஒரு சிறிய வாக்குவாதம் தான் அதை மீடியா தான் பெரிதாக காட்டியது.அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு நிச்சயமாக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஆட்சி  அமைப்பதற்கான சூழல் நிச்சயமாக வரும் அந்த நேரம் வரும். அப்போது உங்களுக்கான கேள்விக்கான பதிலை நாங்கள் செயல் வடிவத்தில் காட்டுவோம்.  கேப்டன் சூப்பரா இருக்காரு , கம்பீரமாக பேசுறாரு. உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வர இருக்காரு என்று பிரேமலதா தெரிவித்தார்.

Categories

Tech |