மதுரைக்கு ஒரு சுற்றுலா மேற்கொள்ளத் திட்டமிட்டால், அங்கு 3 விஷயங்களைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்களில், மதுரை என்பது பலரையும் கவர்ந்த ஒன்றாகும். வரலாற்று சிறப்பு மிக்க நகரமாகும். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பெயர் பெற்றது, நீங்கள் மதுரைக்கு ஒரு சுற்றுலா மேற்கொள்ளத் திட்டமிட்டால், அங்கு 3 விஷயங்களைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
மீனாட்சி அம்மன் கோயில் :
முதலில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். அழகாக வண்ணமயமான காட்சியளிக்கும் கோயிலாக, நான்கு கோபுரங்கள் (வாயில்கள்) கொண்ட கொண்ட கோயிலாக பக்தி பரவசமூட்டும். பார்வதி தேவியின் ஒரு வடிவமான மீனாட்சி மற்றும் சிவபெருமானின் வடிவமான சுந்தரேஸ்வர் ஆகியோருக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பல குழப்பான வரலாறு, புனையப்பட்ட கதைகள் மற்றும் பல புராணக் கதைகள் சித்தரிக்கப்படுவதால், அவ்வளவு எளிதாக இந்தக் கோயிலைப் புரிந்து கொள்ள முடியாது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.
திருமலை நாயக்கர் அரண்மனை:
ஆம், அது சரி, அரண்மனைகள் ராஜஸ்தானில் மட்டுமல்ல, தமிழகத்திலும் உண்டு. கி.பி 1636 இல் மதுரையின் மன்னர் நாயக்கரால் இந்த அரண்மனை கட்டப்பட்டது, திராவிட மற்றும் ராஜ்புதனத்தின் கட்டிடக்கலையை இந்தக் கோயிலில் பார்க்கலாம். பல சிறபங்களும், கல் வேலைபாடுகளும் பார்க்க முடியும். சுற்றுலாவின் போது சிறிது ஓய்வு எடுக்கவும் இங்கு வசதிகள் உள்ளது.
உணவும் நடைபயணம்:
மதுரையில் பல ஹோட்டல்கள் உள்ளன. முருகன் இட்லி கடை என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற உணவகங்கங்கள் இங்கு தான் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தவிர, உள்ளூர் உணவகங்களில் நிறைய சாப்பிடலாம் – அம்மா மெஸ் மற்றும் கோனார் மெஸ் ஆகியவை தவறவிடக்கூடாது. நீங்கள் அனைத்தையும் ஒரு களம் பார்த்தப் பின், கடைசியில் ஒரு ஜிகார்த்தண்டாவையும் பருகலாம். பால், பாதாம் பிசின் மற்றும் பிற பொருட்களால் செய்யப்பட்ட மதுரையிலிருந்து ஒரு சிறப்பு பானம். கட்டாயம், முயற்சி செய்ய வேண்டும்.