Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இறந்து கிடந்த கால்நடைகள்…. அதிர்ச்சியடைந்த விவசாயி…. கிராம மக்களின் கோரிக்கை…!!

மர்ம நோய் தாக்கி கால்நடைகள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் பகுதியில் விவசாயியான  நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நடராஜனுக்கு சொந்தமான 2 ஆடுகள் மற்றும் 2 கன்றுக்குட்டிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. மர்ம நோய் தாக்கியதால் கால்நடைகள் இறந்து கிடந்ததை பார்த்து நடராஜன் அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் சுற்றுப்புற கிராமங்களில் இருக்கும் கால்நடைகளும் மர்ம நோய் தாக்கி பரிதாபமாக இறக்கின்றன. எனவே கால்நடைகளை காப்பாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |