Categories
மாநில செய்திகள்

இது அண்ணாமலைக்கு தெரியுமா? தெரியாதா?…. இத தெரிஞ்சிக்கிட்டு பேசு சொல்லுங்க…… ஏர்போர்ட்டில் பாடம் எடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்…..!!!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வாரம் தோறும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்வதற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி வெற்றி பெற்ற மாணவர்களை கடந்த வருடம் டிசம்பர் மாதம் துபாய் அழைத்த செல்வதற்கு பள்ளி கல்வித்துறை திட்டமிட்டது. ஆனால்‌ ஒமிக்ரான் வைரஸ் தொற்றின் பாதிப்பு காரணமாக துபாய் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தற்போது 11-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக துபாய் அழைத்து செல்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களோடு சேர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியும் சார்ஜா செல்கிறார். இதற்காக விமான நிலையத்திற்கு வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக வெளிநாடு அழைத்து செல்கிறோம். அதன் பிறகு சார்ஜா பகுதியில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சி மற்றும் துபாய், அபுதாபியில் உள்ள பல்வேறு இடங்களை மாணவர்களுக்கு சுட்டிக்காட்ட இருக்கிறோம்.

இந்த 4 நாட்கள் சுற்றுப்பயணத்தின் போது மாணவர்களுக்கு நான் தாயாகவும், தந்தையாகவும் இருப்பேன். இனிவரும் காலங்களில் வாசிக்கலாம் வாங்க என்ற திட்டத்தில் வெற்றி பெறும் மாணவர்களையும் தமிழக அரசு சார்பில் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதற்கு திட்டமிட்டுள்ளோம். வெளிநாட்டு பயணத்திற்கு மாணவர்களை சிஎஸ்ஆர் நிதியிலிருந்து அழைத்துச் செல்கிறோம். இந்நிலையில் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர்  தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை திட்டத்தை பின்பற்றுவதாக கூறி வருகிறார்கள்.

ஆனால் அது பொய். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆரம்பத்திலிருந்து புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால் தான் மாநில கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்காக புதிய குழு ஒன்றினை அமைத்துள்ளார். இந்த குழு டிசம்பரில் அறிக்கை சமர்ப்பித்த பிறகு அதன்படி கல்விக் கொள்கையானது பின்பற்றப்படும். எனவே இதை அவர்கள் தெரிந்து கொண்டு பேச வேண்டும். பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டால் பள்ளிக்கல்வித்துறை மட்டும் இன்றி அனைத்து துறைகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுப்பதற்காக தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சனையில் இருந்து நம்மை காக்கும் முதல்வராக தமிழக முதல்வர் ஸ்டாலின் இருப்பார் என்று கூறினார். ‌

Categories

Tech |