பாகிஸ்தானில், ஹெச்ஐவி கிருமி தொற்று கொண்ட ஊசியால் எய்ட்ஸ் நோயை பரப்பிய மருத்துவரைபோலீசார் கைதுசெய்தனர்.
பாகிஸ்தானின் லர்கானா மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் முசாஃபர் கங்காரோ.இவர் ராட்டோரேடோவில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார் .
இவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் . தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு ஹெச்ஐவி கிருமி தொற்றுள்ள ஊசியை போட்டுள்ளார் .இதன் மூலம் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது .அதில் 65 பேர் குழந்தைகள். இதனையறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் புகாரளிக்க காவல் துறையினர், அவனை கைது செய்து சிறையிலடைத்தனர்.