”கோ” திரைப்படத்தை தவறவிட்ட மற்றொரு நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜீவா. இயக்குநர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”கோ”. எதிர்பார்ப்பின்றி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தில் நடிப்பதற்கு முதலில் சிம்புவுக்கு வாய்ப்பு கிடைத்தது. சில காரணங்களால் அவர் அந்த அப்படத்தில் நடிக்கவில்லை.
இந்நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்கு சிம்புவிற்கு அடுத்தபடியாக நடிகர் பரத்தை படக்குழுவினர் அணுகியுள்ளனர். ஆனால் சில காரணங்களால் பரத் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.