அண்ணாச்சி பூ இந்தியா முழுவதும் கிடைக்கப்படும் ஒரு பொருள். சைனா, கொச்சின் முதலிய இடங்களிலிருந்து இவை இறக்குமதி செய்யப்படுகிறது.
இனிப்பு சுவையுடன் கூடிய இந்த அண்ணாச்சி பூ சுறுசுறுப்பு தன்மையுடன் இருக்க வைக்கும். இதன் இதழ்கள் நட்சத்திரம் போல் 8 வால்களுடன் காணப்படும். இதனுள் விதை இருக்கும். பசியின்றி அவதிப்படுபவர்களுக்கு பசியை தூண்ட இது நல்ல மருந்து. பசிக்கவில்லை, சாப்பாடு வேண்டாம், உணவை கடமைக்கு என்று சாப்பிடுபவர்களுக்கு இது சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.
வாயுக்கோளாறு பிரச்சினைகளை தீர்க்க இது உதவுகிறது. இந்த வாயுக்களின் சீற்றத்தால் வயிற்றுப் பகுதியில் ஒருவித மந்தத் தன்மை ஏற்படும். இந்த நிலை மாறி நன்கு பசியைத் தூண்ட தினமும் உணவில் அன்னாசிப் பூவை சேர்த்துக் கொண்டால் வாயுக்களின் சீற்றத்தைக் குறைத்து நன்கு பசியைத் தூண்டும்.