அண்டை மாநிலங்களிலிருந்து கோழி மற்றும் வாத்துகளை கொண்டு வர கோவா அரசு தடை விதித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், அடுத்ததாக உருமாறிய கொரோனா, பறவை காய்ச்சல் என்று வரிசை கட்டி நிற்கிறது. இதனால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகின்றது. கேரளாவில் பரவிய பறவை காய்ச்சல் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது பரவி உள்ளது.
இதனால் அண்டை மாநிலங்களிலிருந்து கோழி மற்றும் வாத்துகளை கொண்டு வர கோவா அரசு தடை விதித்துள்ளது. கேரளா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருவதை அடுத்து இந்த நடவடிக்கையை கோவா அரசு எடுத்துள்ளது. மேலும் முக்கிய இறைச்சிக் கூடங்களை மூடவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.