தான் திமுகவில் இணைந்ததாக வெளியான தகவல் தவறானது என்று கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்ற செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களில் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கட்சி தொடங்கப்போவதில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் தான் திமுகவில் இணைந்ததாக வெளியான தகவல் தவறானது என்று கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்ற செயலாளர் கே.வி.எஸ் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக பணியாற்ற உள்ளதாகவும், திமுகவில் சேர்ந்ததாக வெளியான செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். சற்று நேரத்துக்கு முன் நான்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர்கள் திமுகவில் நடந்ததாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.