பிரஷர் குக்கரில் சமைக்கும் உணவை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் பற்றிய தொகுப்பு
தற்போதைய அவசர காலகட்டத்தில் இயந்திரம் போல் இயங்கிவரும் பலர் அனைத்தையும் விரைவாக செய்து முடிக்க எண்ணுகின்றனர். சாப்பிடும் உணவையும் விரைவாக சமைத்து முடிக்கவேண்டும் என்பதற்காக பலரும் பிரஷர் குக்கரை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள் இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. பொதுவாக உணவை சமைக்கும்போது காற்று மற்றும் வெளிச்சம் அதில் படவேண்டும் என பழங்காலத்தில் கூறுவது வழக்கம். ஆனால் தற்போது பிரஸர் குக்கரில் சமைக்கும் உணவில் காற்று புகாது வெளிச்சமும் படாது.
மொத்தமாக அடைக்கப்பட்டு பிரஷர் கொடுக்கும் இந்த உணவு சாப்பிடுவதனால் நமது உடலிலுள்ள பலம் குறைந்து பலவீனமாகி விடுகின்றோம். ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்படும் பலம் மிக்க குற்றவாளிகளுக்கு அலுமினிய பாத்திரத்தில் வைத்து பிரஷர் கொடுத்து சமைக்கப்படும் உணவை வழங்குவார்கள். அதற்கு காரணம் பிரஷர் கொடுத்து சமைக்கப்படும் உணவை சாப்பிடுவதால் அவர்கள் பலவீனமாகி விடுவார்கள் என்பதுதான். அவர்களின் இந்த பழக்கம் தான் தற்போது உலகம் முழுவதிலும் பரவியுள்ளது.
உணவுப் பொருட்களை விளைவிக்க ஆறுமாதம் காத்திருக்கும் நாம் அதனை சமைப்பதற்கு அரை மணி நேரம் காத்திருப்பது இல்லை. அதனால் உணவு பொருட்களில் இருக்கும் இயற்கையான சத்துக்களும் பிரஷர் குக்கரில் இருந்து வெளிவரும் ஆவியாக சென்றுவிடுகிறது. எனவே பிரஷர் குக்கரை தவிர்த்து மண்பாண்டம், வெண்கலம், பித்தளை, சில்வர் போன்றவற்றில் சமைப்பதினால் 90 முதல் 100 சதவீதம் வரை சத்துக்கள் உணவில் இருக்கும்.