உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டுமென்று திருச்சி போராட்டத்தில் கே.என்.நேரு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தொடரும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுக தலைமை கழகம் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் இன்று முதல் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மாநிலம் முழுவதும் திமுக போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் , மக்களவை உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றுகின்றனர்.
இந்நிலையில் திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற இந்த போராட்டத்தில் பேசிய நேரு , உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும். காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது? என்று பேசியுள்ளார். அவரின் இந்த கருத்து திமுக ,காங்கிரஸ் கூட்டணியிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.