Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக சென்ற பேருந்து… தி.மு.க. பிரமுகருக்கு நடந்த விபரீதம்… காஞ்சியில் பரபரப்பு…!!

நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பேருந்து மோதிய விபத்தில் தி.மு.க பிரமுகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தெருவில் முன்னாள் நகர மன்ற உறுப்பினரும், தி.மு.க பிரமுகருமான பார்த்திபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  தனது வீட்டில் இருந்து சின்ன காஞ்சிபுரம் டி.கே நம்பி தெரு வழியாக நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது, வாலாஜாபாத் நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக பார்த்திபனின் மீது மோதி விட்டது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பார்த்திபனுக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சின்ன காஞ்சிபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |