திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெற்று வருகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் எனது தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் அப்போது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியிருந்தார். அதன்படி தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
காணொலி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் மறைந்த எம்.எல்.ஏ அன்பழகனுக்கு இரங்கல் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு, முதுநிலை பட்டப்படிப்பில் இடஒதுக்கீடு, கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழக்கும் நபர்களின் இறப்பு விகித்ததை மறைத்து சுகாதாரத்துறை குளறுபடி செய்துள்ளதாக வெளியான புகார் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.