குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சின்னவாய்க்கால் தெருவில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். டைல்ஸ் ஓட்டும் வேலை பார்க்கும் இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் யோகேஷ், தர்சினி என 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விஜயலட்சுமி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த விஜயலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் கம்பம் தெற்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.